மருந்து சுத்தி --- 2
மருந்து சுத்தி :-- இதில் தாவர வர்க்கங்கள், தாது வர்க்கங்கள், சீவ வர்க்கங்கள் என்று என்று மூன்று பிரிவுகள் உள்ளது அவற்றைப் பற்றிய விபரங்கள் அவை கிடைக்கும் சூழ்நிலைகள் அதன் பாதிப்புகள் என்று பாகு படுத்திப் பார்க்க வேண்டும். மனிதனின் முதல் மருந்தாக தெரிந்து கொண்டது தாவரவர்க்கங்கள் தான் இது குறித்து ருக் வேதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது. ருக் – மண் – 1- அத்தியாயம் - 23 “ கோபிர்யவம் சக்ருஷத் “ சாகை ராஹரத் வீடுத “ என்கிற ருக் சம்கிதையின்படி மனிதர்கள் ஆதி காலங்களில் நோய்கள் ஏற்படும் காலங்களில், அக் கோளாறுகளை நிவர்த்தி செய்ய – மிருகம், பறவைகளின் சில இயற்கை நடத்தைகளைப் பின் பற்றி விசய தத்துவங்களை உணர்ந்து கொண்டனர். தமக்கு தேவையான உணவுப் பொருட்களை தேடுவதிலும் ஒளசதிகளைத் தெரிந்து கொள்வதிலும் ஆடு, மாடு பறவைகள் முதலியவைகள் அவர்களுக்கு உபதேசிகளாய் இருந்தனவாம். :-- வைத்திய கலாநிதி பத்திரிக்கை ஜூன், ஜூலை – 1919-129 ம் பக்கம் . ...
Comments
Post a Comment